13 வயதான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். 17 வருட ஐபிஎல் வரலாற்றில் இவ்வளவு இளம் வயது வீரர் ஒருவர் ஏலத்தில் வாங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
2025 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் செளதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.
வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் போட்டியிட்டன.
இறுதியாக, ராகுல் ட்ராவிட்டின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வயதான வைபவை 1.10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. வைபவின் அடிப்படை விலை 30 லட்சம் ரூபாய்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி ஜேக் லஷ் மெக்கல்லம், “நாக்பூரில் உள்ள எங்கள் உயர் செயல்திறன் மையத்திற்கு வைபவ் வந்திருந்தார்.
அவரை அங்கு சோதனை செய்தோம். அவர் எங்கள் அனைவரையும் கவர்ந்தார். அவரிடம் திறன் மற்றும் ஐபிஎலில் விளையாட தேவையான அளவு நம்பிக்கை உள்ளது.” என்றார்

